அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணையப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் “பொது அதிகாரசபை” என வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்தக் கொள்கையை அமுல்படுத்துவது கட்டாயமானதாகும்.