பெரும்பாலான அரச நிறுவனங்கள் தற்போது டிஜிரல் முறைமைகளின் செயற்பாட்டில் தங்கியிருப்பதனால், சைபர் தாக்குதல்களுக்கு உணர்வுப்பூர்வமான தகவல்களை திருடுதல், அன்றாட நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தல், நிறுவனங்களின் நன்மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தல் போன்ற பாதிப்புக்களை மேற்கொள்வதற்கு இந்த டிஜிரல் முறைமை பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.
இதனூடாக அரச பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்ல நிலைத்திருத்தல் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. அரச நிறுவனங்களுக்கு அவர்களின் டிஜிரல் முறைமை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும் பொருட்டு, ஸ்ரீலங்கா சர்ட் நிறுவனம் ஆகக் குறைந்த தகவல் பாதுகாப்பு தரநியமங்களை (MISS) தயார் செய்துள்ளதுடன், அதன் மூலம் நிறுவனத்தின் உணர்வுப்பூர்வமான தரவுகள் மற்றும் டிஜிரல் முறைமைக்குத் தேவையான ஆகக் குறைந்த பாதுகாப்பு வெளிப்படுத்தப்படுகின்றது.
இந்த தரநியமங்களுக்கு இசைவாக செயற்படுமாறு சகல நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுவதுடன், ஒரு நிறுவனத்தின் தற்போதைய தகவல் பாதுகாப்பு முன்ஆயத்தத்தைப் பரிசோதிப்பதற்கு சுய மதிப்பீட்டு கேள்விக் கொத்தொன்று இந்த ஆவணத்தின் இறுதியில் தரப்பட்டுள்ளது. இந்த சுயமதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
கொத்தை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளவும்