இப்பொழுது தொலைபேசிகளையும் கையடக்க செயலிகளையும் அநேகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பிரதான மார்க்கமாக இணைத்து வைத்திருக்கின்றனர். இவை இணையத்தை அணுகுவதற்கு, மின்னஞ்சலுக்கு, சமூக வலையமைப்புக்கு மற்றும் மங்கலானவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும் இந்த உயர்மட்ட வசதிகள் உயர்மட்ட ஆபத்துக்களுடன் சேர்ந்தே இருக்கின்றன.
உங்கள் கருவி “வெறுமனே ஒரு தொலைபேசி” அல்ல என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதை ஒரு கணினி என்று நினைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வித்தியாசமான பாதுகாப்பு விதிகள் தேவைப்படுகின்றன.
- செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் கவனமாக சிந்திக்கவும் – அத்துடன் கூகுல் அல்லது அப்பிள் (Apple) போன்ற கண்ணியமான வழங்குனர்களிடமிருந்து மாத்திரம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
- அந்த செயலிகள் உங்கள் அமைவிடத்தையும் தனிப்பட்ட தகவலையும் கேட்கலாம். அது பற்றி கவனமாக இருக்க வேண்டும். இதை தானியங்கியாக வழங்க வேண்டாம். செயலி சரியாக இயங்குவதற்கு இது உண்மையில் அவசியமா என்பதை முதலில் தீர்மானிக்கவும்.
- கிடைக்கக்கூடியதாக இருக்கும்போது உடனே இற்றைப்படுத்தலை நிறுவிக்கொள்க. பெரும்பாலும் இவை வடுபடும் நிலையிலுள்ள முகவரிகளை சீர்படுத்துகின்றன.
- நீங்கள் பயன்படுத்தாதபோது கம்பியற்ற(றசைநடநளள) தொழில்நுட்பத்துடனான செயலிகளுக்கான தொலை இயக்கி இணைப்பை செயலிழக்கச் செய்யுங்கள்.
- வைரசுகளை, தீய பொருட்களை மற்றும் வேவு பொருட்களை ஸ்கேன் பண்ணுவதற்காக கையடக்க பாதுகாப்பு செயலியை நிறுவுவது பற்றி கவனத்திற் கொள்ளவும். இந்த அச்சுறுத்தல்கள் அப்பிள் கருவிகளை விட அன்ட்ரொய்ட் முறைமைகள் அதிக ஆபத்தானவையாக இருக்கின்றன.
- நீங்கள் பயன்படுத்தி முடிந்ததும், குறிப்பாக நிதிசார் செயலியிலிருந்து வெளியேறுக.